10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வுகள் – சிஇஓ அறிவிப்பு!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் அலகுத்தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சில மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு அதிக நாட்கள் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் கல்வி, சிந்தனை திறன், எழுதும் பழக்கம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அடிப்படை கல்வி தெரியாமல் 11 ஆம் வகுப்பிற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாயக்கல்வி தேர்ச்சி காரணமாக மாணவர்களின் கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
SBI அப்ரண்டிஸ் பயிற்சி தேர்வு – ஏப்ரல் மாதம் நடைபெறும்!!
இந்நிலையில் கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., முனுசாமி பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அலகுத்தேர்வு நடத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். அதன்படி குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி பாடங்களை அலகுகளாக பிரிக்கப்பட்டு தினந்தோறும் ஒரு அலகுகளை தேர்வுகளாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் சி.இ.ஓ., அலுவலகத்திலேயே தயார் செய்யப்பட்டு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.
இந்தியாவின் தனி நபர் ஆண்டுக்கு 50 கிலோ உணவை வீணாக்குகிறோம் – ஆய்வு முடிவுகள்!!
இந்த தேர்வுகள் 50 மதிப்பெண்ணுக்கு 1.30 மணி நேரம் நடைபெறுகின்றது. இந்த அலகுத் தேர்வுகள் மூலமாக மாணவர்கள் அடிப்படை பாடங்களை கற்பதுடன், தேர்வுகளை கையாளும் முறையினையும் தெரிந்து கொள்கின்றனர். மேலும் தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்களின் வருகைப்பதிவு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்