தமிழகத்தில் 8 முதல் 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – CEO சுற்றறிக்கை!!
அனைத்து உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 8 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
CEO சுற்றறிக்கை:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள், நடப்பு ஆண்டு ஜனவரி 19 முதல் மீண்டும் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. மேலும் ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 12ம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கான செய்முறை தேர்வுகளும் இன்று முதல் தொடங்கி உள்ளது.
1 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி 9, 10ம் வகுப்புகளுக்கு திறனறி தேர்வுகளை நடத்தவும் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பில் 8 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று சுற்றறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல் – CEO உத்தரவு!!
அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் Awareness on “Adolescent Mental Health” among school teachers of Kanniyakumari district என்ற தலைப்பின் கீழ் உள்ள படிவத்தில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 16.04.2021 மாலை 04.00 மணிக்குள் விடையளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 8 முதல் 12 – ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரிய ஆசிரியைகளும் இதில் பங்கேற்பதை உறுதி செய்ய தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Government job