தமிழகத்தில் பள்ளிக்கு வராத மாணவர்களின் நிலை – கல்வித்துறைக்கு உத்தரவு!!

0
தமிழகத்தில் பள்ளிக்கு வராத மாணவர்களின் நிலை - கல்வித்துறைக்கு உத்தரவு!!
தமிழகத்தில் பள்ளிக்கு வராத மாணவர்களின் நிலை - கல்வித்துறைக்கு உத்தரவு!!
தமிழகத்தில் பள்ளிக்கு வராத மாணவர்களின் நிலை – கல்வித்துறைக்கு உத்தரவு!!

தமிழகத்தில் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ள நிலையில், பள்ளிகளுக்கு வராத மாணவர்களின் நிலை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.

மாணவர்கள் இடைநிற்றல்:

கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டன. ஆனால் போதிய வசதியின்மை மற்றும் குடும்ப வறுமை காரணமாக பல மாணவர்களால் வகுப்புகளில் கலந்து கொள்ள இயலவில்லை.

தமிழகத்தில் பிப்ரவரி 8 முதல் கல்லூரிகள் திறப்பு – வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!!

மேலும் குடும்பத்தின் நிலை காரணமாக பல மாணவர்கள் வேலைக்கு செல்ல வேண்டி இருந்தது. இதனால் அவர்களுக்கு படிப்பின் மீது கவனம் குறைந்தது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையிலும், குடும்ப சூழ்நிலை காரணமாக பல மாணவர்களால் வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாமல் படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு!!

மதுரையை சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் கொரோனா பரவல் காலத்தில் மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை இடைநின்ற மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தக்கோரியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் – தமிழக முதல்வர் அறிவிப்பு!!

இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!