தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை – சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!!
ஆன்லைன் சூதாட்டம் மூலமாக பலர் தற்கொலை செய்து கொள்வது காரணமாக சட்டபேரவையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டம்:
முந்தைய காலத்தில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி பல உயிர்கள் பறிபோன நிலை காரணமாக அரசு சூதாட்டத்தை தடை செய்தது. இந்நிலையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சூதாட்டம் பரிமாண வளர்ச்சி அடைந்து தற்போது ஆன்லைன் மூலமாக நடைபெறுகிறது. இதன் காரணமாக பலர் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தமிழகத்தில் பிப்ரவரி 8 முதல் கல்லூரிகள் திறப்பு – வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!!
இந்த நிலை மாற அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் சூதாட்டம் மூலமாக பல உயிர்கள் பறிபோன நிலை உள்ளது. சிக்கிம், கோவா, டாமன் ஆகிய இந்திய மாநிலங்களை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் சூதாட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்ட பேரவையில் மசோதா தாக்கல் செய்தார். மேலும் குரல் வாக்கெடுப்பு மூலமாக அந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் – தமிழக முதல்வர் அறிவிப்பு!!
ஆன்லைன் சூதாட்டம் தடை திட்டத்தின் படி தடையை மீறி ஆன்லைன் மூலமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட அரங்கம் வைத்திருப்போருக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்