தமிழகத்தில் 7979 ஆசிரியர்களுக்கு ஊதிய நீட்டிப்பு – பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் 7979 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதிய நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த அறிவிப்பு இன்று (ஏப்ரல் 1, 2021) முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. இதனால் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பினை கருத்தில் கொண்டு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், காவல்துறையினருக்கு முக்கிய அறிவிப்பு – தேர்தல் அதிகாரி வெளியீடு!!
இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறையில் தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது, பள்ளிக் கல்வித்துறையில் 7979 தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் பிற பலன்கள் அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்த உத்தரவு ஏப்ரல் 1ம் தேதி வரை அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரசுப்பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வரும் நிலையில் தேர்தலுக்கு பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்