தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? முதல்வர் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் தற்போது பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து ஜூலை 6ம் தேதி அன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி முதல் மாநிலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பாதிப்பு குறைவாக காணப்படும் 27 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிர்வாக பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போது பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது.
SBI ATM கட்டணம் முதல் சிலிண்டர் விலை வரை – நாளை முதல் 10 மாற்றங்கள்!
தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்றின் வீரியம் குறைந்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் தற்போது தெலுங்கானா, பீகார் மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பரவல் முழுமையாக குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்திருந்தார்.
ஜூலை 19ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீக்கம் – பிரிட்டன் அரசு!!
இதையடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வரும் ஜூலை 6ம் தேதி அன்று சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஆகஸ்ட் மாதத்தில் முதற்கட்டமாக கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அதற்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
It’s real are fake
Hi
No College open. Only online calss