ஜூலை 19ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீக்கம் – பிரிட்டன் அரசு!!

0
ஜூலை 19ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீக்கம் - பிரிட்டன் அரசு!!
ஜூலை 19ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீக்கம் - பிரிட்டன் அரசு!!
ஜூலை 19ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீக்கம் – பிரிட்டன் அரசு!!

பிரிட்டனில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஜூலை 19 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கட்டாயம் தளர்த்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்:

கடந்த ஆண்டு முதல் உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு டெல்டா, ஆல்பா போன்ற திரிபு வைரஸ் பரவல் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமையை சரி செய்ய பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் டெல்டா, ஆல்பா வைரஸ் காரணமாக அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

இதனால் கடுமையான பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் விளைவாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் ஊரடங்கு கட்டுப்பாடு விதிகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜூலை 19 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக சஜித் ஜாவித் பதவியேற்றுள்ளார்.

SBI ATM கட்டணம் முதல் சிலிண்டர் விலை வரை – நாளை முதல் 10 மாற்றங்கள்!

இது குறித்து அவர் கூறுகையில், அரசின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. இந்நிலையில், ஜூலை 19 ஆம் தேதி நிச்சயம் ஊரடங்கு தளர்த்தப்படும் என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக தொற்று பாதிப்பு, தீவிர நோய்த்தொற்று, உயிரிழப்புகள் குறைந்துள்ளதாகவும், விரைவில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!