தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ரேஷன் கார்டு
தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையிலும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது தவிர அரசு வழங்கும் நிதி உதவிகளும் ரேஷன் கார்டுகள் மூலமாகவே வழங்கப்படுகின்றன. இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டது.
GIRHFWT திண்டுக்கல் நிறுவனத்தில் ரூ.62,000/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
அதனால் புதிதாக ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. எனவே அரசு புதிய ரேஷன் கார்டு வழங்குவதை நிறுத்தி வைத்தது. அதனால் புதிதாக திருமணம் முடிந்தவர்கள், பெயர், முகவரி உள்ளிட்டவை மாற்ற விண்ணப்பித்தவர்கள், ரேஷன் கார்டு தொலைந்துவிட்டதால் விண்ணப்பித்தவர்கள் புதிய ரேஷன் கார்டு பெற முடியாமல் சிரமத்தில் இருந்தனர். கடந்த வாரம் புதிய ரேஷன் கார்டு விநியோகம் செய்யப்படும் என அரசு அறிவித்த நிலையில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் வர இருப்பதால் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே புதிய ரேஷன் கார்டுகள் வழங்க முடியாது என உணவு வழங்கல் துறை ஆணையர் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.