பொதுத்தேர்வில் மாறுபடும் மதிப்பெண்? ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை – முழு விவரம்!

0
பொதுத்தேர்வில் மாறுபடும் மதிப்பெண்? ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை - முழு விவரம்!

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்து ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆசிரியர்கள் நடவடிக்கை

தமிழகத்தில் 11 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான மறு மதிப்பீட்டின் போது மதிப்பெண்களில் மாறுபாடு இருந்தால் அந்த விடைத்தாள்களை திருத்தி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதாவது அந்த ஆசிரியர்களுக்கு ஓராண்டு சம்பள உயர்வை நிறுத்தி கல்வித்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த கல்வியாண்டில் மேல்நிலைத் தேர்வுகளுக்கான மறு மதிப்பீட்டு கூறிய மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அப்போது ஆசிரியர்கள் மாறுபட்ட மதிப்பெண்களை வழங்கி இருப்பது தெரியவந்தது.

NSIC நிறுவனத்தில் நேர்காணல் – டிகிரி / டிப்ளமோ முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

எனவே ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அப்போது ஆசிரியர்கள் உரிய விளக்கங்களை கொடுத்தனர். அந்த வகையில் இந்த ஆண்டு பொது தேர்வுகள் விடைத்தாள் மதிப்பீட்டு செய்யும் பணியில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில் கடந்த ஆண்டு விளக்கம் கொடுத்த ஆசிரியர்களும் கலந்து கொண்டுள்ளனர். எனவே மாறுபட்ட மதிப்பெண் வழங்கிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு கல்வித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது. மேலும் கல்வித்துறையின் இந்த நடவடிக்கையால் பதவி உயர்வு உள்ளிட்ட நிலைகளில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என அவர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!