தமிழகத்தில் பள்ளிகளுக்கு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தொடர்ச்சியாக இன்று முதல் 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் பொது தேர்வு எழுதும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதியுடன் முடிவடைந்தது. மேலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு பருவ தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் ஏப்ரல் இரண்டாம் தேதி தொடங்கியது. மேலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் ஏப்ரல் ஐந்தாம் தேதி உடன் முடிவடைந்தது. அவர்களுக்கான கோடை விடுமுறை 6ம் தேதி தொடங்கியது.
NSIC நிறுவனத்தில் நேர்காணல் – டிகிரி / டிப்ளமோ முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
அதனை அடுத்து நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை காரணமாக ஏப்ரல் 22 மற்றும் 23 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மேலும் இதற்கிடையே மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ம் தேதி நடைபெற உள்ளதால் ஆசிரியர்கள் அந்தப் பணியிலும் ஈடுபட உள்ளனர். எனவே இதனை அடுத்து 4 முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் 21ஆம் தேதி வரை 9 நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.