தமிழக தனியார் பள்ளிகளுக்கு அரசின் நிலுவைத் தொகை – கோரிக்கை மனு!!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவிகித மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம் அமலில் உள்ளது. அதற்கான கட்டண தொகையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும் என தனியார் பள்ளி சங்க பொதுச்செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு மனு அனுப்பியுள்ளார்.
தனியார் பள்ளிகளின் கோரிக்கை:
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அரசின் கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் 25 சதவிகித ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட வேண்டும். இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காலத்திலும் 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் வழங்கியது. ஆனால் அதற்கான கட்டண தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த வழக்கு விசாரணையின் போது மார்ச் 31 ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகளில் கட்டண நிலுவை தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் தற்போது வரை அவை வழங்கப்படவில்லை. எனவே இது குறித்த மனுவை தனியார் பள்ளிகளின் சங்க பொதுச்செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு மனு அனுப்பியுள்ளார்.
காமராஜர் பல்கலை உறுப்பு கல்லூரிகளில் விடைத்தாள்கள் திருத்தம் – விரிவுரையாளர்கள் அவதி!!
அதில், “2020-21 ஆம் ஆண்டிற்கான கட்டாய கல்வி திட்டத்தின் கீழ், 25 சதவிகித மாணவர் சேர்க்கை வழங்கிய தனியார் பள்ளிக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை மார்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நீதிமன்ற உத்தரவை தங்களின் மேலான கவனத்திற்கு பணிவோடு எடுத்து செல்கிறோம். கொரோனா பெருந்தொற்று நேரத்தில் கூட மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் மூலமாக தரமான கல்வி வழங்கப்பட்டது.
தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஆணையர் தகவல்!!
கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே அவர்களின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும்”, இவ்வாறு அதில் குறிப்பிட்டனர்.