தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து – பெற்றோர்கள் கோரிக்கை!!

0
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து - பெற்றோர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து - பெற்றோர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து – பெற்றோர்கள் கோரிக்கை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் கிடுகிடுவென அதிகரித்து வரும் நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வினை ரத்து செய்து தேர்ச்சி வழங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தினசரி பாதிப்பு எண்ணிக்கை மாநிலத்தில் 2000ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுத்தேர்வு ரத்து கோரிக்கை:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. பின்னர் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதால் பள்ளிகளை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதனை பின்பற்றி தமிழகத்திலும் கல்வி நிறுவனங்களை திறக்க முடிவு செய்யப்பட்டது.

பான் & ஆதார் கார்டு இணைப்பிற்கு மார்ச் 31 கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!!

அதன்படி கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்ரவரி 8 முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பின்னர் சட்டப்பேரவையில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுவதாக முதல்வர் அவர்கள் அறிவித்தார். மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

தற்போது கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நாள்தோறும் 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி 9 முதல் 11ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே 3 முதல் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதை தொடர்ந்து அவர்களுக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கான புதிய அறிவிப்பு – EPFO இணையதளம் மூலம் தகவல்கள்!!

இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதனை அரசு ஏற்கவில்லை. தற்போது பெற்றோர்கள் அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதில், மாணவர்கள் தினசரி பள்ளிக்கு சென்று வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. அங்கு முறையாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதில்லை.

நாட்டா நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு – ஏப்ரல் 1 கடைசி நாள்!!

எனவே பிளஸ் மாணவர்களுக்கு பொதுத்தேர்வினை ரத்து செய்து தேர்ச்சி வழங்கப்பட வேண்டும் அல்லது பள்ளிகளில் உரிய கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதற்கான வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!