தமிழகத்தில் சமூக நலத்துறையின் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்த அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வூதியம் உயர்வு
2019 ஆம் ஆண்டு சமூக நலத்துறை பிறப்பித்த அரசாணைக்கு எதிராக ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதிய தொகையை ரூபாய் 2000 என நிர்ணயித்து 3 ஆண்டுகளுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியதாகவும் ஏப்ரல் 2003 க்கு முன் தங்களின் சேவையை முறைப்படுத்த முடியவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ESIC ஆணையத்தில் Senior Resident காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || உடனே விண்ணப்பியுங்கள்!
மேலும் அவர்களுக்கு ஓய்வூதிய விதிகள் மற்றும் பங்களிப்பு சட்டம் ஆகிய இரண்டின் கீழ் ஓய்வூதியம் பறிக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஒவ்வொரு ஓய்வூதியத்தை திருத்தத்தின் போதும் பணவீக்கத்தின் அடிப்படையில் ஓய்வூதித்தை தொடர்ந்து உயர்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.