ஜனவரி மாதம் வேலை வாய்ப்பு முகாம் – தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மாணவர்களுக்கு அறிவிப்பு!!
புத்தாக்க பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் அப்பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
புத்தாக்க பயிற்சி முகாம் :
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சென்னை மண்டல மையம் மற்றும் உறுப்பு சமுதாயக்கல்லூரியின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைப்பாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் சென்னையில் இன்று நடந்தது. அதில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தலைமை ஏற்று நிகழ்ச்சியை நடத்தினார்.
வேலைவாய்ப்பு முகாம்:
புத்தாக்க பயிற்சி முகாமின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்து துணை வேந்தர் பேசினார். அதில், “திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களின் விவரங்களை பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையதளத்தில் ஆதார் எண்ணுடன் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, டிசம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்தபின் அவர்களுடைய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 7 மாதங்களாக வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெறவில்லை. கொரோனா தொற்றுக்கு முன்பாக மாவட்ட வேலை வாய்ப்பு நிறுவனங்களுடன் இணைந்து வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
4 கோடி தலித் மாணவர்களுக்கு ரூ.59,000 கோடி கல்வி உதவித்தொகை – மத்திய அரசு அறிவிப்பு!!
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்