அரசு பள்ளிகளை தயார் செய்ய ரூ.1.96 கோடி நிதி – தமிழக அரசு வழங்கல்!!
மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் அரசு பள்ளிகளுக்கான நடப்பு கல்வியாண்டின் பராமரிப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு நிதி:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் தமிழக அரசு மானியம் வழங்குகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 292 அரசு பள்ளிகளுக்கான நடப்பு கல்வியாண்டில் பராமரிப்பு நிதி 1.96 கோடி ருபாய் மானியமாக பள்ளி மேலாண்மை குழுவின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
4 கோடி தலித் மாணவர்களுக்கு ரூ.59,000 கோடி கல்வி உதவித்தொகை – மத்திய அரசு அறிவிப்பு!!
ஒதுக்கப்பட்ட அளவு:
100 வரை எண்ணிக்கையுள்ள மாணவர்கள் கொண்ட 21 பள்ளிக்கு தலா ரூ.25,000வீதம் 5.25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 101 முதல் 250 வரை மாணவர் எண்ணிக்கையுள்ள 83 பள்ளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் 41.50 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 251 முதல் 1,000 மாணவர் எண்ணிக்கை உள்ள 155 பள்ளிகளுக்கு தலா 75,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 1,000 மாணவர்களுக்கு மேல் உள்ள 33 பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் வீதம் 33 லட்ச ரூபாய் என மொத்தமாக 1.96 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் விமானங்கள் இந்தியா வர ஜன.7 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!
பராமரிப்பு விதிகள்:
அரசு வழங்கிய தொகையை ஒவ்வொரு பள்ளியும் வகுப்பறை, வளாக தூய்மை, கழிப்பறை சுத்தம், கை கழுவும் வசதி போன்ற சுகாதார பணிகளுக்காக 10% செலவழிக்க வேண்டும். பள்ளியில் செயல்பாடாத நிலையில் உள்ள கற்றல் உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்களை மாற்ற வேண்டும். நாளிதழ், மின் கட்டணம், இணையம், ஆய்வக உபகரணம், தேவையான வேதிப்பொருட்கள் போன்ற வசதிகளை செய்வதற்கு மீதம் உள்ள பணத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு செலவு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்