‘ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்’ – தமிழகத்தில் முழுவதுமாக அமல்!!
தமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்:
தமிழகம் முழுவதும் அனைவருக்கும் பொது விநியோக திட்டத்தினை செயல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை பயன்படுத்தலாம்.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வோரும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் குடிபெயர்ந்தவர்களும் இந்த திட்டம் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் பொருள்கள் வாங்கி கொள்ளலாம்.
தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு – கல்வித்துறை செயலாளர் வெளியீடு!!
தமிழகத்தில் பொதுவிநியோக திட்டம் மூலமாக 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் அரசு நியாய விலை கடைகளில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் முதல் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் ஏப்ரல் மாதத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா காலம் என்பதால் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது. மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்பட்டது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல்!!
மேலும் விலையில்லா பசு மாடுகள், ஆடுகள் போன்றவை கிராமங்களில் உள்ள விவசாய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு சார்பில் வழங்கப்படும் மலிவு விலை ரேஷன் பொருட்களை ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டம் மூலமாக நாட்டில் எங்கு இருந்தாலும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டபேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்