தமிழகத்தின் 47வது தலைமை செயலாளர் – ராஜீவ் ரஞ்சன் பதவியேற்பு!!
தமிழகத்தில் 47-வது தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் அவர்களை நியமித்துள்ளதாக தலைமை செயலத்தின் முந்தைய செயலாளர் சண்முகம் நேற்று அரசாணை பிறப்பித்தார். அதன்படி இன்று சென்னை தலைமை செயலகத்தில் பதவி ஏற்பு விழா மிக எளிமையாக நடைபெற்றது.
47 வது தலைமை செயலாளர்:
தமிழகத்தின் தலைமை செயலாளர் சண்முகம் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் புதிய தலைமை செயலாளராக மத்திய அரசு பணியில் இருந்த ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட உள்ளதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் மத்திய அரசின் மீன்வளத்துறை, கால்நடைத்துறை செயலாளராக பணியாற்றி வந்தவர்.
தமிழகத்தில் பிப்ரவரி 8 முதல் அனைத்து கல்லூரிகளும் திறப்பு – அரசு உத்தரவு!!
பின்னர் மத்திய அரசு பணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். பொதுவாக தமிழக அரசு பணியில் இருப்பவர்கள் 6 ஆண்டுகள் வரை பணியாற்றலாம். ஆனால் அவர் 1 ஆண்டு மட்டுமே பணியாற்றிய நிலையில் அவரை மத்திய அரசு பணியில் இருந்து விடுவிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது. தற்போது அவர் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 9, 11ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!!
சென்னை தலைமை செயலகத்தில் இன்று மிகவும் எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இன்று அவரது அறையில் அவர் மட்டுமே இருந்து 8 மணி அளவில் கையொப்பமிட்டு அவரது பணியை தொடங்கினார். தமிழக முதல்வர் ஆலோசனையின் படி இவர் தலைமை செயலராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ஏற்கனவே தலைமை செயலாளராக இருந்த சண்முகம் அவர்கள் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்