தமிழகத்தில் கொரோனாவால் ஆண்கள் தான் அதிகம் பாதிப்பு – ஆய்வில் தகவல்!!
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட போது பெண்களை விட ஆண்களே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்களை அதிகம் பாதிக்கும் கொரோனா:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 1,25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் 3986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமாக சென்னையில் மட்டும் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,57,851 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அவர்களில் 2,42,880 பேர் குணமடைந்துள்ளனர். 10,685 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,286 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அவர்களில் 30 முதல் 39 வயதினர் அதிகாமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 முதல் 49 வயதினர் 18.37 சதவீதமும், 50 முதல் 59 வயதினர் 17.97 சதவீதமும், 20 முதல் 29 வயதினர் 17.93 சதவீதமும், 60 முதல் 69 வயதினர் 11.13 சதவீதமும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – 70% மாணவர்கள் வருகை!!
அதில் குறைந்தபட்ச குழந்தைகள் 9 வயதுக்கு உட்பட்டவர்களில் 1.60 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 59.71 சதவீதமும், பெண்கள் 40.29 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஆண்கள் தான் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.