மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் காலவரையின்றி நீட்டிப்பு – DME அறிக்கை!!
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான ஓராண்டு பயிற்சி வகுப்புகள் காலவரையின்றி நீட்டிக்கப்பட உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் (DME) தெரிவித்துள்ளது.
மருத்துவ மாணவர்களுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு இறுதியாண்டு படிப்புகள் முடித்த பின்னர் ஓராண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும். ஆனால் கொரோனா காரணமாக அவர்களுக்கான பயிற்சி கால அவகாசத்தை காலவரையின்றி நீடிக்கப்பட உள்ளதாக மருத்துவக்கல்வி இயக்குநரகம் (DME) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆனால் தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்குநரகம் (DME) 2015 ஆம் ஆண்டில் மருத்துவ சேர்க்கையில் சேர்ந்து 2021 ஆம் ஆண்டில் ஓராண்டு பயிற்சி முடிந்து மருத்துவர்களுக்கான பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படும் என 26.3.2021 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. தற்போது மீண்டும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு!!
அதில், “2016 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்து, தற்போது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி தேர்வு எழுதி, அந்த தேர்வு முடிவுகள் வந்த பின்னர் பயிற்சி மருத்துவராக சேரும் வரை ஏற்கனவே 29.03.2020 முதல் 28.3.2021 வரை ஓராண்டு பயிற்சி முடித்த மாணவர்களின் பயிற்சி காலம் காலவரையின்றி நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கடன் உத்தரவாத திட்டம் – கால அவகாசம் நீட்டிப்பு!!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறான முன்னுக்கு பின் முரணான முடிவுகளை மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிடுவது சரி இல்லை எனவும், இந்த அறிவிப்பு காரணமாக முதுகலை படிக்க விரும்பும் மாணவர்களும், நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள் என மாணவர்கள் தரப்பில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.