தமிழகத்தில் ஜூன் 28க்கு பிறகு ஊரடங்கு தளர்வுகள்- எந்தெந்த மாவட்டங்களுக்கு அனுமதி?
தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவானது ஜூன் 28 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிப்பது குறித்த ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி கொடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு உத்தரவு
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு உத்தரவானது மே 10 ஆம் தேதி முதல் நீட்டிக்கப்பட்டு தற்போது ஜூன் 28 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு உத்தரவு முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், அடுத்த கட்ட முழு ஊரடங்கு தளர்வுகளை அளிக்க அரசு ஆலோசித்து வருகிறது. முன்னதாக கடந்த 2 வாரங்களாக அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கில், கொரோனா பாதிப்பு விகிதங்களை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களும் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
Whats App இல் மறைந்திருக்கும் அம்சங்கள் – தவறாமல் படிங்க!
அதன் படி முதலாம் வகையாக அறிவிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் எவ்வித தளர்வுகளும் கொடுக்கப்படாமல் அதே கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து 2 ஆம் வகையாக அறிவிக்கப்பட்டுள்ள 23 மாவட்டங்களில் மட்டும் கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. மேலும் 3 ஆவது வகையில் பிரிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டால், கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மதுரை டூ துபாய் சர்வதேச விமான சேவை – ஜூலை 1 முதல் தொடக்கம்!
அந்த வகையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி கொடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி இ பதிவு நடைமுறைகளும் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வகை 3 ல் உள்ள 4 மாவட்டங்களில் மட்டும் மேலும் சில கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படலாம். இந்த நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூன் 25) ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.