தமிழகத்தில் மாலை 7 மணி வரை கடைகள் திறக்க அனுமதி – முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற ஜூன் 28ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தற்போது புதிய தளர்வாக காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் நாளை (ஜூன் 21) முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வருகிற 28ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது புதிய தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. புதிய தளர்வுகள் அனைத்தும் பாதிப்புகள் குறைவாக காணப்படும் 27 மாவட்டங்களுக்கு மட்டும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய தளர்வாக கடைகள் திறக்கும் நேரத்தை அதிகரித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
- தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஊரடங்கு தளர்வுகள்!
- உணவகங்கள் மற்றும் அடுமனைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். E-commerce மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து நிறுவனங்களும் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
- இதர E-commerce நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம்.
- இனிப்பு மற்றும் கார வகை விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
Good decision