கொளுத்தும் கோடை வெயில்.. இவர்களுக்கு அலர்ட் – அரசின் அறிவுரை!

0

கொளுத்தும் கோடை வெயில்.. இவர்களுக்கு அலர்ட் – அரசின் அறிவுரை!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் புது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

கோடை வெயில்

தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல் மே மாதங்களில் கோடை வெயில் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது தற்போது ஏப்ரல் மாதம் தொடங்கி சில நாட்களிலேயே வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. பகல் நேரத்தில் 100 டிகிரி வரை வெப்பம் பதிவாகி இருந்தாலும் இரவு வேளைகளிலும் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே பொதுமக்கள் கடுமையான சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் குட் நியூஸ் … விரைவில் அறிவிப்பு!

இந்நிலையில் வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அறிவுரை வழங்கியுள்ளது. அதில் குழந்தைகள் கர்ப்பிணி தாய்மார்கள் வயது முதிர்ந்தோர் நோய்வாய் பட்டவர்கள் வெயிலில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வெயிலில் வெளியே செல்லும் நபர்கள், திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் , போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் ஓ ஆர் எஸ் எனப்படும் உப்பு கரிசாலை பருக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!