தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் சம்பளம் கிடையாது – அரசு எச்சரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் சம்பளம் கிடையாது - அரசு எச்சரிக்கை!
தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் சம்பளம் கிடையாது - அரசு எச்சரிக்கை!
தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் சம்பளம் கிடையாது – அரசு எச்சரிக்கை!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அவ்வாறு போராட்டம் நடத்தினால் சம்பளம் கிடையாது என அரசு எச்சரித்துள்ளது.

போராட்டம் அறிவிப்பு

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறை சார்பில் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கின்றனர். ஆனால் அது குறித்து அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. அதனால், சட்ட சபையில் ஊரக வளர்ச்சி துறை மானியக் கோரிக்கை எடுத்துக் கொள்ளப்படும் மார்ச் 30 ஆம் தேதி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் & சங்க உறுப்பினர்கள் ஒரு நாள் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றனர்.

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஊதியம் ரூ. 357 ஆக உயர்வு.. அரசாணை வெளியீடு!

இந்நிலையில் அரசு பணியாளர் நன்னடத்தை விதியின்படி, அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்து அலுவலகத்திற்கு வராத பணியாளர்களுக்கு அன்றைய தினம் சம்பளம் கிடைக்காது. இது பற்றி நன்றாக தெரிந்தும் போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அன்றைய தினம் போராட்டம் நடத்தினால் அல்லது வேளைக்கு வராமல் இருந்தால் அவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!