தமிழகத்தில் செப்டம்பர் வரை ரூ.2000 நிவாரணம் வழங்கல்? அரசுக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் கொரோனா நிவாரணம் மேலும் 3 மாதங்கள் நீடித்து வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா நிவாரணம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் மே 24 ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து தனியார் நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலர் வேலையிழந்துள்ளனர். மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4000 நிதியுதவியாக வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். அதற்கான முதல் தவணை தொகை ரூ.2000 மே மாதம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் இரண்டாம் தவணை தொகை ரூ.2000 இந்த மாதம் வழங்கப்பட்ட உள்ளது.
இனி ரிபீட் எல்லாம் ஸ்டாப் – பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ‘மெகா சங்கமம்’ விரைவில்!!
இருந்த போதிலும் கொரோனா பரவல் முற்றிலும் குறையாமல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் ஊரடங்கை முழுமையாக ரத்து செய்ய முடியாது. இதனால் மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் தற்போது வழங்கி வரும் கொரோனா நிவாரண தொகையை மேலும் 3 மாதங்கள் (செப்டம்பர் வரை) வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.