இனி ரிபீட் எல்லாம் ஸ்டாப் – பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ‘மெகா சங்கமம்’ விரைவில்!!
தமிழகத்தில் லாக்டவுன் காரணமாக சினிமா, சீரியல் ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் விஜய் டிவி புதிய யுக்தி ஒன்றை கையாண்டுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
சீரியல் ஷூட்டிங்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக இந்த வருடத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் அனைத்து இடத்திற்கும் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு பொழுதுபோக்காக அமைந்த ஷூட்டிங்கும் தற்போது தடைபட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 8 முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி? உண்மை நிலவரம் இதுதான்!
வீட்டில் இருக்கும் மக்களுக்கு பெரும் பொழுதுபோக்கே இந்த சீரியல்கள் தான். ஆனால் அதுவும் தற்போது மறுஒளிபரப்பாக வெளியாகி வருகிறது. போட்ட சீரியல்களை எத்தனை தடவை தான் பார்ப்பது என்று ரசிகர்களும் கொந்தளித்து வருகின்றனர். மேலும் இப்பொழுது தான் சீரியல்களில் பல முக்கிய காட்சிகள் இடம் பெறும் நேரம் என்பதால் பலரும் இப்படி நிறுத்தப்பட்டதை அடுத்து வருத்தத்திற்குள்ளாகி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் தான் விஜய் டிவி ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதாவது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சீரியலுடன் பாக்யலக்ஷ்மியும் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாகவுள்ளது. இந்த அப்டேட்டை கேட்டதிலிருந்து பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
‘ஹேமாவை கொலை செய்த வெண்பா, உண்மையை கூறும் கண்ணம்மா’ – பாரதி எடுக்கப்போடும் அதிரடி முடிவு!!
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் பாக்கியலட்சுமி மெகா சங்கமம் ஒளிபரப்பாகி சக்கை போடு போட்டது. இந்நிலையில் மீண்டும் இப்படி களமிறங்கியுள்ளது, பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பொழுது இந்த மெகா சங்கமத்தை வைத்து பார்க்கும்போது பிரஷாந்த்தும், எழிலும் நண்பர்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் எழிலும் சென்னை தான் பிரஷாந்த்தும் சென்னை தான். ஏற்கனவே கண்ணனுக்கும், பிரஷாந்துக்கும் மறைமுக மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்றிணைந்தால் மாஸ் கன்டென்ட் தான். இதனால் தான் இந்த சீரியல்களுக்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.