ஆன்லைனில் பட்டா வழங்கும் முறை – தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அசையா சொத்துக்களுக்கு பட்டா வழங்கும் முறையில் ஸ்டார் 2.0 மென்பொருள் மூலம் புதிய மாற்றங்கள் மக்களுக்கு எளிதான முறையில் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மென்பொருள்:
தமிழக அரசு கடந்த 2018ம் ஆண்டு பட்டா மாறுதல் மற்றும் பத்திரப்பதிவு வசதிகளையும் எளிதாக்கும் நோக்கத்தில் ஸ்டார் 2.0 என்ற புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தியது. இந்த மென்பொருளினால் பட்டா தானாக ஆன்லைனில் மாறும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அசையா சொத்துக்களின் உரிமை மாற்றம் செய்யப்படும் போது ஆவணங்கள் சர்வே எண் உட்பிரிவு செய்ய தேவை எழாத சொத்துக்கள் ஆவணப்பதிவு முடிந்தவுடன் சார்பதிவாளர் கணினி வழி ஒப்புதல் வழங்கப்படுகிறது. இதனால் முற்றிலும் பட்டா இணைய வழியாகவே மாற்றப்படும் என்று அரசு உத்தரவிட்டது.
தமிழகத்தில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு இம்மாதம் பள்ளிகள் திறப்பு – அரசு ஆலோசனை!!
சோதனை முயற்சி:
முதலில் சோதனை முயற்சியாக இந்த திட்டம் செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் உள்ள பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருப்பூர், தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு 8.2.2021 முதல் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
பதிவாளர்களுக்கு அறிக்கை:
இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் மாவட்டங்களின் பதிவாளர் அலுவலகங்களுக்கு இது குறித்து பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், அசையா சொத்துக்கு ஆவணம் எழுதி கொடுத்த நபரின் பெயரும், ஏற்கனவே வழங்கப்பட்ட இணையவழி பட்டாவில் கண்டுள்ள நில உரிமையாளர் பெயரினையும் ஒப்பிட்டு பார்த்து இரண்டும் ஒன்றாக இருந்தால் பட்டா தானாக மாறுதலுக்கான சம்மதம் பதிவாளரால் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்