தமிழகத்தில் மளிகை, காய்கறி கடைகள் திறக்க அனுமதி – நேர கட்டுப்பாடுகள் விபரம்!
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு உத்தரவினை வருகின்ற ஜூன் மாதம் 14ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். தற்போது இந்த ஊரடங்கின் பொழுது எந்தெந்த கடைகள் எப்போது திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடைகள் திறக்க அனுமதி:
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மக்கள் பயனுக்காக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. பின்பு தொற்றின் வீரியம் தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த 24ம் தேதி முதல் கடைகள் அனைத்தும் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஜூன் 7ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகின்ற சூழலில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகின்ற 14ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க அனுமதி? அரசு மறுப்பு!
அதன்படி தமிழகத்தில் தொற்று அதிகமாக காணப்படும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மளிகை, காய்கறி விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்டோ, டாக்சிகள் இயங்க அனுமதி – ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு!
மேலே குறிப்பிட்டுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து பாதிப்பு குறைவாக காணப்படும் இதர மாவட்டங்களில் மளிகை, காய்கறி விற்பனை செய்யும் கடைகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செய்லபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து மின் பொருட்கள், பல்புகள், ஸ்விட்சுகள், ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள், மிதிவண்டி, இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள், ஹார்டுவேர் கடைகள், வாகனங்கள் உதிரிபாகம் விற்பனை செய்யும் கடைகள், கல்வி புத்தகம் மற்றும் எழுதுபொருட்களை விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.