தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகள் கவனத்திற்கு – பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை!!
தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் விரைவாக தங்களது அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் இல்லை எனில் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் காரணத்தினால் கடந்த ஜூன் 14ம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் நிர்வாக பணிகளுக்காக திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளிக் கல்வித்துறை அரசு உதவி பெரும் பள்ளிகள் அனைத்தும் தங்களது அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தற்போது இது குறித்து பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
அதில் கூறியதாவது, பள்ளிக் கல்வி ஆணையரின் அறிவுறுத்தலின்படி அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இறந்த பெற்றோர்களின் குழந்தைகள் விவரங்களையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை அடுத்து இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
TN Job “FB Group” Join Now
அதேபோல் தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் அங்கீகாரத்தை உரிய முறையில் விண்ணப்பித்து புதுப்பித்து கொள்ள வேண்டும். எனவே இதுவரை அங்கீகாரத்தை புதுப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் இல்லையெனில் துறை சார்த்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அங்கீகாரம் இல்லாத பாள்ளிகளின் பட்டியலை தயாரித்து அதன் அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பள்ளி கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
To ICMR and MHA
First and foremost
There is no urgency to lift lock down
Unless count of CARONA is decreased
We people need life. Not to make urgency and cause the same old story
What is the urgency to ply buses and loading fully again not wearing masks.
Masks is mandatory in buses and if not they are not allowed in bus
Only 50percent of buses to ply and 20 – 50 people to be travel in buses
Then only we can bring CARONA down else
We Tamil Nadu will be same