தமிழக அரசு கல்லூரிகளில் உள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் – TRB பதிலளிக்க உத்தரவு!!

1
தமிழக அரசு கல்லூரிகளில் உள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் - TRB பதிலளிக்க உத்தரவு!!
தமிழக அரசு கல்லூரிகளில் உள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் - TRB பதிலளிக்க உத்தரவு!!
தமிழக அரசு கல்லூரிகளில் உள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் – TRB பதிலளிக்க உத்தரவு!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடங்களில் கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அரசு முயற்சி எடுப்பதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உதவி பேராசிரியர்களுக்கான பணியிடங்கள்:

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்களுக்கான 2331 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப TRB, 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அரசு தரப்பில் நியாயமற்ற நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுவதாக தனியார் கல்லூரி பேராசிரியை வழக்கு தொடர்ந்தார்.

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் குறித்த புகார்கள் – 42 குழுக்கள் அமைக்க கல்வித்துறை உத்தரவு!!

அந்த வழக்கு குறித்த மனுவில் 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட உதவி பேராசிரியர்களுக்கான அறிவிப்பில் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் அந்த பணிகளுக்கு ஏற்கனவே அரசு கல்லூரிகளில், கவுரவ விரிவுரையாளர் பணிகளில் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு செய்யும் நடவடிக்கை விதிமீறல் ஆகும்.

மருத்துவ மாணவர்கள் வேறு கல்லூரிக்கு மாற அனுமதி வழங்குதல் – உச்சநீதிமன்றம் விளக்கம்!!

அந்த பணியிடங்களுக்கான பணி நியமனம் TRB மூலம் நடத்தப்பட வேண்டும். அரசின் இந்த செயல் காரணமாக ஏற்கனவே வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் தகுதியான மற்றும் தனியார் கல்லூரிகளில் குறைந்த வருமானத்தில் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். பொது வேலைவாய்ப்பு வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். எனவே கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறும்!!

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.எம்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது அதில் இந்த வழக்கு தொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் TRB தலைவர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. புறவாசல் நியமனங்கள்
    கவுரவத்தின் சாயம் பூசல்
    சொகுசாக நுழைக்கும்
    அரசியலார் தந்திரங்கள்
    சுயநலத்தைக் கலைக்கும்
    நீதி மயமான மன்றங்கள்.
    பேராசிரிர் பதவியிலும்
    ஊழலின் ஆழமாக்கம்
    கோணல்களின்றியே
    நியமனங்கள் வேண்டுமய்யா.
    வேண்டுகிறேன் கல்வித் துறையை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!