மருத்துவ மாணவர்கள் வேறு கல்லூரிக்கு மாற அனுமதி வழங்குதல் – உச்சநீதிமன்றம் விளக்கம்!!
மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் மட்டுமே மற்ற கல்லூரிகளுக்கு மாற முடியும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:
மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பல காரணங்கள் காரணமாக வேறு கல்லூரிகளுக்கு மாறுவது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி அரசு அங்கீகாரம் பெறாத கல்லூரிகளில் மருத்துவ படிப்புகள் பயிலும் மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்ற ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு குறித்து மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் தொடங்கியது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழகத்தில் துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறும்!!
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே மற்றொரு மருத்துவ கல்லூரிக்கு மாற முடியும் எனவும் அங்கீகாரம் இல்லாத கல்லூரிகளில் படித்தவர்கள் மாறுவதற்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்