ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் – தமிழக முதல்வர் அறிவிப்பு!!

0
ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் - தமிழக முதல்வர் அறிவிப்பு!!
ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் - தமிழக முதல்வர் அறிவிப்பு!!
ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் – தமிழக முதல்வர் அறிவிப்பு!!

2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக இன்று நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம்:

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 2 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி, புதிய பல்கலைக்கழகம் திறப்பு போன்ற மக்களுக்கு தேவையான அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.

விழுப்புரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் – சட்டமசோதா தாக்கல்!!

இந்நிலையில் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்வதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு அந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை மெரினா கடற்கரையில் பல கோடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தடுக்க வந்த காவல்துறை மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த வழக்குகளை வாபஸ் பெறுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

2017-18 கல்வியாண்டு மாணவர்களுக்கான இலவச மடிக்கணினிகள் – பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவு!!

மேலும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்தார். கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த கூட்டம் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் 8 முக்கிய மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!