19 லட்சம் மாணவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் ஏற்பாடு- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் பள்ளிகள் வருகிற ஜனவரி 19-ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் முதற்கட்டமாக 19 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சத்து மாத்திரைகள் :
தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகத்திலும் பள்ளிகள் திறக்க அரசிடம் ஆலோசனை வழங்கப்பட்டது.
1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – பள்ளிக்கல்வித்துறை தகவல்!!
முதற்கட்டமாக பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி வருகிற ஜனவரி 19-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையில் சத்து மாத்திரைகள் வழங்க கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
புதிய பதவி உயர்வு முறை குறித்த உத்தரவு ரத்து- வேளாண் பல்கலை பதிவாளர் அறிவிப்பு!!
இதன்படி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்க 19 லட்சம் மாணவர்களின் பட்டியலை தயார் செய்துள்ளது. இதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் வைட்டமின் மாத்திரைகளை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்