ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தில் தங்கம் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

0

ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தில் தங்கம் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

மார்ச் மாதத்தில் இரண்டாம் வாரத்திற்கு பின் உயர்ந்த தங்கம் விலை, ஏப்ரல் மாதம் தொடங்கியும் இன்னும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

புதிய உச்சத்தில் தங்கம் விலை:

சனிக்கிழமையான ஏப்ரல் 13ஆம் தேதி தங்கம் விலை அதிகபட்ச உச்சமான 53 ஆயிரத்தை நெருங்க இருந்தது. அதன்பின் தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று யாரும் எதிர்பார விதமாக சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்து 53 ஆயிரத்தை தாண்டியது. இன்றைய நிலவரப்படி மேலும் தங்கம் கிராம் ஒன்றுக்கு பத்து ரூபாய் உயர்ந்து 6,670 க்கும் சவரன் 80 ரூபாய் உயர்ந்து ரூ.53,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தேர்தலை முன்னிட்டு சிறப்பு நடவடிக்கை – 10,214 பேருந்துகள் இயக்க முடிவு!

அதேபோல் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 7140 க்கும் ஒரு சவரன் 57,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.88.00 க்கும், ஒரு சவரன் வெள்ளி ரூ.88,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!