தமிழகத்தில் பூக்கள் விலை இவ்வளவா – வெளியான முக்கிய தகவல்

0
தமிழகத்தில் பூக்கள் விலை இவ்வளவா

தமிழகத்தில் பங்குனி மாதம் முடிந்த சித்திரை பிறந்து இருக்கும் நிலையில் பூக்களின் விலை தாறுமாறாக குறைந்துள்ளது.

பூக்களின் விலை

தமிழகத்தில் கடந்த பங்குனி மாதத்தில் அதிகமாக விசேஷங்கள் வந்தது. குறிப்பாக முருகன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்றது. மேலும் பங்குனி மாதத்தில் பலர் குலதெய்வ வழிபாடு செய்வார்கள். அதனால் பூக்களின் விலையானது சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால் சித்திரை மாதம் பிறந்துள்ள நிலையில் விசேஷங்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் அதிகமாக இல்லை. அதன் காரணமாக பூக்களின் விலையானது தாறுமாறாக குறைந்துள்ளது.

TNPSC தேர்வுக்கு படிக்கிறீங்களா? இதை மிஸ் பண்ணாதீங்க – உடனே பாருங்க!

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ. 400க்கும், ஐஸ் மல்லியும், முல்லை பூ ரூ.360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஜாதிமல்லி ரூ. 300க்கும், கனகாம்பரம் ரூ.500க்கும் அரளிப்பூ ரூ. 250 க்கும் சாமந்தி ரூ.240 க்கும் சம்பங்கி மற்றும் பன்னீர் ரோஸ் ரூ. 120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.‌ இது குறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணைத் தலைவர் முத்துராஜ் கூறுகையில் முகூர்த்த இல்லாததால் பூக்களின் விலை குறைந்துள்ளது. ஏப்ரல் 21 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி வருவதை முன்னிட்டு பூக்களின் விலை மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!