தமிழகத்தில் புதிதாக இணைப்பு பெற வரும் சிக்கல் – மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு கேட்டு ஆன்லைனில் பலர் விண்ணப்பித்துள்ள நிலையில், இது குறித்து பல புகார் வந்துள்ளது. இந்நிலையில் இந்த புகார்களுக்கு மின்வாரியம் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மின்வாரியம்
தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு பெறவும், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யவும், ஆன்லைன் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய இணைப்பு பெற www.tangedco.org என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு வரும் விண்ணப்பங்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அதில் புதிய மின் இணைப்பு கேட்டு 30 நாட்கள் வரை கால தாமதம் ஆவதாக புகார் வந்துள்ளது.
விடுமுறை நாட்களை மாற்றியமைக்க கோரிக்கை – அரசின் முடிவு என்ன?
இதனை மின்சார வாரியம் பரிசீலனை செய்த நிலையில், அதற்கான வரைவு அறிக்கையை கடந்த மே மாதம் வெளியிட்டது. அதில் விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் மின் இணைப்பை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அவ்வாறு தாமதம் ஏற்பட்டால், ஒவ்வோரு நாளுக்கும் தலா 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என மின்வாரியம் தெரிவித்தது. ஆனால் விண்ணப்பதாரர்கள் தேவை இல்லாமல் அலைக்கழிக்கப்படுவதாக மீண்டும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் சேவைகள் தாமதம் செய்வது குறித்த புகார்களை இணையத்தில் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல உயர் அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட பணியாளர் குறித்து எழுத்து பூர்வமாக புகார் அளித்தாலும் உடனே நவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.