தஞ்சாவூரிலும் வந்தாச்சு புதிய விமான நிலையம் – ரூ.200 கோடி செலவில் அமைக்க திட்டம்!!
தஞ்சாவூரில் கிட்டத்தட்ட ரூ.200 கோடி செலவில் பிரமாண்ட புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விமான நிலையம்:
தமிழகத்தை பொறுத்த வரையிலும் மதுரை, திருச்சி மற்றும் சென்னையில் மட்டுமே ஏர்போர்ட் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக தஞ்சாவூரில் இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி அமைப்பு புதிய ஏர்போர்ட்டை அமைக்கவுள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, ரூ.200 கோடி செலவில் பிரமாண்டமாக புதிய உள்நாட்டு முனையத்தை உருவாக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக இணைப்பு பெற வரும் சிக்கல் – மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கை!
மிக கூடிய விரைவில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கும் எனவும், தஞ்சாவூர் விமானப்படை தளம் அருகே விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததையொட்டி இவ்வாறு புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.