தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் – கொரோனா தொற்று எதிரொலி!!
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தாமதமாக வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் தாமதம் :
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் கொரோனா பரவல் மத்தியில் நடைபெற்றது. ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மக்கள் வாக்களித்தனர். இந்த தேர்தல் முடிவுகள் வருகின்ற மே 2ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. கொரோனா பரவல் அதிகரிப்பதால் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கையே விடுத்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மே 2ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என அறிவித்தது.
தற்போது கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக பல தொகுதிகளிலும் 30க்கும் மேற்பட்ட சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதமாகும் என கூறப்படுகிறது. மேலும் வழக்கமாக 20 சுற்றுக்குள் எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கை இம்முறை அதிகரித்துள்ளது. சில தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட சுற்றுகள் எண்ணப்படுகின்றன. பல்லாவரம், செங்கல்பட், டுஅம்பத்தூர் தொகுதியில் முடிவுகள் வெளியாக நள்ளிரவு ஆகும் என எதிர்பார்க்கபடுகிறது. அதேபோல் ஓசூர், பூந்தமல்லி தொகுதிகளில் 36 சுற்றுகள் எண்ணப்பட இருக்கின்றன.
‘கற்போம் எழுதுவோம்’ திட்ட கல்வி தொலைக்காட்சி பாடங்கள் – இன்று முதல் தொடக்கம்!!
இவற்றின் முடிவுகள் வெளியாக இரவு 10 மணிக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. அதேபோல் ஓசூர், பூந்தமல்லி தொகுதிகளில் 36 சுற்றுகள் எண்ணப்பட இருக்கின்றன. இவற்றின் முடிவுகள் வெளியாக இரவு 10 மணிக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைவான வாக்கு எண்ணிக்கை சுற்று இருப்பதால் இதன் முடிவுகள் மாலை வெளியாகும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. மேலும் சில தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை சுற்று அதிகமாக இருப்பதால் முடிவுகள் இரவை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்