Vijay Hazare Trophy – கர்நாடகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணி! ரசிகர்கள் உற்சாகம்!
கர்நாடகா, தமிழ்நாடு அணிகள் மோதும் விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதி போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
அரையிறுதிக்குள் தமிழ்நாடு அணி:
ஜெய்ப்பூரில் KL சைனி மைதானத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதி போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் மோதியது. டாஸ் வென்ற கர்நாடகா கேப்டன் மனிஷ் பாண்டே பௌலிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான அப்ரஜித்தும், ஜெகதீசனும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினார்கள். 13 ரன்கள் எடுத்திருந்த அப்ரஜித் விஜயகுமார் பந்தில் அவுட் ஆனார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீஷன் 101 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
திருவண்ணாமலை கோவிலில் ரூ.30000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜன.20 கடைசி நாள்!
102 ரன்கள் எடுத்திருந்தபோது பிரவீன் துபே பந்தில் ஜெகதீஷன் அவுட் ஆக பின்பு களம் இறங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தினேஷ் கார்த்திக், இந்திரஜித், ஷாருக்கான் அதிரடியாக விளையாடினர். இதில் ஷாருக்கான் 39 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்தது. பின்னர் 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடக அணி களம் இறங்கியது. தொடக்க வீரரான படிக்கல் 0 ரன்களில் அவுட் ஆனார். இதனால் தொடக்கத்திலேயே தமிழ்நாடு அணி வெற்றி பாதையை நோக்கி விளையாடியது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம் – பெற்றோர்கள் கோரிக்கை!
கர்நாடக அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அபினவ் 34 ரன்களும், ஸ்ரீனிவாஸ் சரத் 43 ரன்களும், பிரவீன் துபே 26 ரன்களும் எடுத்தனர். எனவே 39 ஓவர் முடிவில் கர்நாடக அணி 203 ரன்களுக்கு 10 விக்கெட்டை இழந்து தோல்வி அடைந்தது. இதனால் தமிழ்நாடு அணி 2வது காலிறுதியில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. மேன் ஆப் தி மேட்ச் விருதை தமிழ்நாடு வீரர் ஜெகதீசன் பெற்றார்.