தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம் – பெற்றோர்கள் கோரிக்கை!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம் - பெற்றோர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம் - பெற்றோர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம் – பெற்றோர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பேருந்துகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் பேருந்துகள்:

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம். தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பாக இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது. இதனை பெற்று மாணவர்கள் பேருந்துகளில் பள்ளிக்கு கட்டணமின்றி இலவசமாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் தொற்று தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்ட்ட ஊரடங்கால் பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வந்தது.

தமிழக அரசு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கவனத்திற்கு – முக்கிய அரசாணை வெளியீடு!

தற்போது அரசின் முயற்சியால் கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர போதியளவு பேருந்துகள் இல்லாததால் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் காலை மற்றும் மாலை வேலைகளில் மாணவர்களின் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

IPPB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜன.1 முதல் புதிய விதிமுறை அமல்!

அரசு கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அதிகமாக இருப்பதால் கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். காலை 9 மணி முதல் 9.45 மணிக்குச் செல்லும் அரசுப் பேருந்தில், கல்லூரி மாணவர்கள் கூட்டம் அலைமோதும். மாணவர்கள் படியில் நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். அதனால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!