தமிழகத்தில் ஜூன் 3 முதல் தடுப்பூசி பணிகள் நிறுத்தம்? சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!

0
தமிழகத்தில் ஜூன் 3 முதல் தடுப்பூசி பணிகள் நிறுத்தம்? சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!
தமிழகத்தில் ஜூன் 3 முதல் தடுப்பூசி பணிகள் நிறுத்தம்? சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!
தமிழகத்தில் ஜூன் 3 முதல் தடுப்பூசி பணிகள் நிறுத்தம்? சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!

தமிழகத்தில் ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும். ஜூன் மாதம் 42.58 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாக கூறியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க தற்போது தடுப்பூசிகள் மட்டுமே ஒரே ஆயுதமாக உள்ளது. அனைத்து நாடுகளும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. தடுப்பூசிகள் மக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இவை மனித உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. எனவே மக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு – 7வது ஊதியக்குழு விவரம்!!

இதனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. முன்களப் பணியாளர்களுக்கு பின்னர், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதடுப்பூசி செலுத்தப்பட்டு வந்ததது. பிறகு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி பற்றாக்குறையால் இந்த திட்டத்தை விரிவுபடுத்த காலதாமதமாகிறது என அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இன்னும் 2 தினங்களில் தமிழகத்தில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பு தீர்ந்து விடும் என மருத்துவத்துறை அமைச்சர் இன்று காலை தெரிவித்தார். அதனால் ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தற்போது தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் மத்திய அரசிடம் இருந்து இந்த மாதத்திற்கான 1.74 லட்சம் தடுப்பூசி டோஸ் வரவேண்டியுள்ளது. அது ஜூன் 6ம் தேதி வந்தடையும். அதுவரை இருப்பில் உள்ள தடுப்பூசிகளை ஆட்சியர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!