தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்கள் மூடல் – கொரோனா எதிரொலி!!
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பிரசித்தி பெற்ற கோவில்கள் மூடப்பட்டுள்ளன. அதனால் பக்தர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 7900க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக வழிபாட்டுத்தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத கூட்டங்கள், திருவிழாக்கள் போன்றவை நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு படி நாடு முழுவதும் உள்ள தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியங்கள் கொரோனா காரணமாக மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நீதிமன்றங்களுக்கான கொரோனா கட்டுப்பாடுகள் – அரசு வெளியீடு!!
அதே போல கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், நாமக்கல் நரசிம்மர் மற்றும் ரங்கநாதர் கோயில், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயில்களும் மூடப்பட்டுள்ளன. மேலும், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், திருமுக்கூடல், தென்னேரி உள்ளிட்ட ஏழு பகுதிகளில் அமைந்துள்ள புராதான திருக்கோயில்கள் அனைத்தும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகிற மே மாதம் 15 ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பகதர்கள் தரிசனம் செய்ய முடியாமல் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.