தமிழக நீதிமன்றங்களுக்கான கொரோனா கட்டுப்பாடுகள் – அரசு வெளியீடு!!
தமிழகத்தில் கொரோனா காரணமாக சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் வழக்குகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசும் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பொது இடங்களில் கூட்ட நெரிசலை தடுக்க திருவிழாக்கள், மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டு தளங்களில் கொரோனா காரணமாக இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வரும் சனிக்கிழமை முதல் வழக்குகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விசாரிக்கப்படும் என தலைமை பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் கேட்டது.
தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்? அரசு வட்டாரங்கள் தகவல்!!
அதன் பின்னர் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளாக நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டியவற்றை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியைச் சந்தித்து சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது நீதிமன்றங்களில் வழக்குக்காக வரும் மக்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
அதன்பின்னர் உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் ப.தனபால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். அதில் முக்கிய வழக்குகள் மற்றும் ஜாமீன் வழக்குகளில் மட்டும் அரசு வழக்கறிஞர்கள் நேரடியாக ஆஜரானால் போதுமானது. மேலும் உயர் நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளும் அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையினருக்கு 3 நாட்கள் விடுமுறை!!
வழக்கறிஞர் அறைகள் மற்றும் நூலகங்கள் ஏப்ரல் 17 முதல் மூடப்படும். இந்த அறிவிப்பு ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று கொரோனா சூழல் குறித்து ஆய்வு செய்து பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.