தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – முதல்வர் ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடியுடன் நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
முதல்வர் ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றுடன் மூன்றாவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக மே 10 முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கு மேல் பதிவாகியுள்ளதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.15,000 நிதியுதவி – மாநில முதல்வர் அறிவிப்பு!!
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமுள்ள 46 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். அதில் மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.