தமிழகத்தில் ஏப்ரல் 9 முதல் இரவு ஊரடங்கு? புதிய விதிமுறைகள் அமல்படுத்த வாய்ப்பு!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா புதிய கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும், அவை நாளை மறுநாள் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
- கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளது.
- மேலும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்கப்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- அரசுத்துறை ஊழியர்கள் அலுவலகத்தில் பணிபுரியும் விகிதத்தை குறைக்க வாய்ப்புகள் உள்ளது.
- போக்குவரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வண்ணம் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
- பூங்காக்கள், கடற்கரை, நீச்சல், குளங்கள், தியேட்டர்கள், வழிபாட்டு தலங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அத்தியாவசியமற்ற பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
பள்ளி, கல்லூரிகள் மூடல் – மாநில அரசுகள் நடவடிக்கை!!
கொரோனா பரவல் காரணமாக மாநில அரசுகளே கட்டுப்பாடுகளை விதிக்க ஏற்கனவே மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை மறுநாள் (ஏப்ரல் 9) அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.