தமிழகத்தில் பெரிய கடைகள் மூடல் – தலைமை செயலாளர் உத்தரவு!!
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக இன்று முதல் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 15 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கட்டுப்பாடு நடவடிக்கையாக இரவு ஊரடங்கு, ஞாயிற்று கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் கடந்த சனிக்கிழமை அன்று கூடுதல் கட்டுப்பாடுகள் சில விதிக்கப்பட்டன. அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் திங்கள் கிழமை முதல் அமலுக்கு வந்தது. இந்த கட்டுப்பாடுகளின் படி திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், பார்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவை மூடப்பட்டன. மேலும் தனியார் நிறுவன ஊழியர்கள் 50 சதவிகிதம் பேர் மட்டுமே பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு உத்தரவு எதிரொலி – பள்ளி, கல்லூரிகள் மூடல்!!
இந்நிலையில் இன்று முதல் 3000 சதுர அடிக்கு அதிகமாக உள்ள பெரிய கடைகளை மூடுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும், எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.