முழு ஊரடங்கு உத்தரவு எதிரொலி – பள்ளி, கல்லூரிகள் மூடல்!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நோய்த்தொற்று அதிகமாக பரவும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனா தாக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
கொரோனா ஊரடங்கு:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா தாக்கம் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த கொரோனா பரவலில் அதிகப்படியான எண்ணிக்கையை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதன் பின்னர் பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. ஆனால் தற்போது கொரோனா அதிகமாக பரவி வருவதால் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாணவர்கள் எதிர்காலம் பாதிக்காத வகையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் & தேர்வுகளும் நடைபெற்றன. தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பிற்கு முன்னர் – வியாபாரிகள் தகவல்!!
கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் & ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் பல இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய அரசு பல இடங்களில் ஆக்சிஜன் ஆலைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா கட்டுக்குள் கொண்டுவர பிராத்தனை செய்வோம்.