முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0
முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் காரணமாக பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என உதகை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சியர் உத்தரவு:

தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக புரட்டி போட்ட பாதிப்பு தற்போது குறைந்து வந்தது. அதனால் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். தற்போது தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இதன் காரணமாக பல நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் தீவிரமடைந்து உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டயாமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலா தளங்களில் வெளிமாநில மக்கள் அதிகமாக வருவதால் அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது.

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் சம்பளம் – கிரேடு பே ரூ.4200 வழங்க கோரிக்கை!!

உதகை மண்டல ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பின் படி, “பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி போல குளிர் பிரதேசங்களில் கொரோனா தாக்கம் பரவ ஆரம்பித்தால் கட்டுப்படுத்த முடியாது. எனவே மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் எனவும் இல்லாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்”, இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!