கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்?? உயர்கல்வித்துறை முக்கிய ஆலோசனை!!
கொரோனா நோயால் கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்த கல்வியாண்டு தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. இந்நிலையில் மற்ற ஆண்டு மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறப்பது குறித்து உயர் கல்வித்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் திறப்பு:
கொரோனா நோய் 2020-ஆம் ஆண்டையே ஒரு மாற்றத்திற்கு தள்ளியுள்ளது. கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரிகள் கடந்த டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்நிலையில் ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
பூஜ்ய கல்வியாண்டாக நடப்பு ஆண்டை அறிவிக்க திட்டம்?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
இந்நிலையில் மற்ற ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் கல்லூரிகள் திறக்கலாம் என கல்வித்துறை வட்டாரங்கள் சார்பாக தெரிவித்துள்ளனர். இதற்கான கோரிக்கை மனுவை கல்லூரி கல்வி இயக்கத்தின் மண்டல அதிகாரி தரப்பில் கருத்துக்கள் பெறப்பட்டு உயர் கல்வித்துறையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
130 பணியாளர்களுக்கு பதவி உயர்வு- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு!!
தற்போது இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா பரவி வருவதால் ஜனவரி மாதம் பள்ளிகள் திறப்பது தாமதமாகும். எனவே டிசம்பர் 31 வரை நோய் பரவல் நிலவரங்களை ஆய்வு செய்து, சுகாதாரத் துறையிடம் கலந்து பேசிய பிறகு தான் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Did u have conscience bcoz anga 1st clg nu kuduthuttu last ah school nu end pannuringa