பூஜ்ய கல்வியாண்டாக நடப்பு ஆண்டை அறிவிக்க திட்டம்?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த 9 மாதங்களாக திறக்கப்படவில்லை. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடவில்லை. இதன்படி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த ஆண்டை பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
பூஜ்யம் ஆண்டு:
கொரோனா காலத்தில் பள்ளிகள் 6 மாதங்களாக திறக்கப்படாத நிலையில் பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தி வருகின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது எந்த அளவில் மாணவர்களுக்கு புரியும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
130 பணியாளர்களுக்கு பதவி உயர்வு- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு!!
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சாவகாட்டு பாளையத்தில் அம்மா மினி கிளினிக் திறப்புவிழாவில் தமிழக கல்வித்துறை அமைச்சர் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், தமிழகத்தில் கிராமங்களில் மருத்துவ வசதிக்காக 2000 மினி கிளினிக் திறக்கப்படவுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியது போன்ற தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடைமுறை படுத்தப்பட்ட மிக முக்கிய திட்டங்களாக உள்ளது.
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு!!
தொடர்ந்து பேசிய அவர் இந்த ஆண்டை பூஜ்ஜிய ஆண்டாக அறிவிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன் ஆலோசனை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் பொங்கல் பரிசு வழங்குவதில் சில இயந்திரங்கள் கோளாறு உள்ளதாக புகார் வந்துள்ளது இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.