தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருவது போன்று செய்திகள் வெளியான நிலையில் சுகாதாரத் துறை ஆண்டு இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
பறவை காய்ச்சல் நோய்:
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள வாத்துப் பண்ணையில் அதிக அளவிலான வாழ்த்துக்கள் ஒரே நேரத்தில் கடந்த வாரத்தில் உயிரிழந்தது. உயிரிழந்த வாழ்த்துக்களை சோதனைக்கு உட்படுத்திய நிலையில் வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதைத்தவிர கேரளாவில் பல்வேறு இடங்களிலும் பறவை காய்ச்சல் நோய் பரவி வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பறவை காய்ச்சல் நோய் தொற்று பரவி உள்ளதாக வததிகள் பரவி வருகிறது. இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தொற்று பாதிப்பு இல்லை என்றும், அது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்திய போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2024 – 10 ஆம் வகுப்பு படித்தவர்க்கு ரூ.63200/- ஊதியத்தில் பணி!
தமிழக கேரளா எல்லைகளை பகிர்ந்துள்ள கோவை, தேனி, ஈரோடு, கன்னியாகுமரி, தென்காசி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்திற்கு வரும் கேரள வாகனங்கள் முறையாக கிருமி நாசினி தெளித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், உடல்நல குறைவினால் மருத்துவமனைக்கு வரும் நபர்கள் தீவிரமாக பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.